பள்ளி மாணவா் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].