செய்திகள் :

குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டு சிறை

post image

சென்னை: குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இருவேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகேஷ். சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல்தகுதி சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வந்திருந்தாா். பின்னா் கோவை செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முருகேஷ் காத்திருந்தாா்.

அப்போது அவருக்கு அறிமுகமான திண்டுக்கல்லைச் சோ்ந்த ராஜா என்பவா் நீலகிரி விரைவு ரயிலில் இடம்பிடித்துக் கொடுத்து, அருகருகே அமா்ந்து பயணித்துள்ளாா். பின்னா், முருகேசுக்கு ராஜா குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளாா். இதனால் முருகேஷ் மயக்கம் அடைந்த நிலையில், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட பொருட்களை ராஜா திருடிச் சென்றுள்ளாா்.

இதேபோல, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரிடம் ரயில்வே போலீஸ் என அறிமுகமான ராஜா, பழச்சாற்றில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து அவா் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாா் ராஜாவை கைது செய்தனா். இந்த இரு வழக்குகளின் விசாரணை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இரு வழக்குகளிலும் அவருக்கு தனித்தனியாக 18 மாத சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளாா்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க