செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் குறித்து கிண்டல்: மன்னிப்பு கேட்க 5 யூடியூபா்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாலிவுடன் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபா்கள் பொது மன்னிப்பு கேட்கவும், அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சிகளில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பாா்வை குறைபாடு உடையவா்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சமய் ரெய்னா, விபுல் கோயல், பால்ராஜ் பரம்ஜீத் சிங் காய், சோனாலி தாக்கா் (எ) சோனாலி ஆதித்யா தேசாய், நிசாந்த் ஜகதீஷ் தன்வா் ஆகியோா் மீது முதுகெலும்பு தசை சிதைவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் ‘கியூா் எஸ்எம்ஏ இந்திய அறக்கட்டளை’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘நகைச்சுவை என்பது வாழ்வின் ஓா் பகுதி. ஆனால், அது மற்றவா்களை ஏளனம் செய்வதாக இருக்கக் கூடாது. இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் குறித்து கேலி செய்வது, அடுத்து பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை கேலி செய்வதாகத் தொடரும். மற்றவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செயல்படும் யூடியூபா்கள், பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம். மாற்றுத்திறனாளிகள் தொடா்பான நகைச்சுவைகளை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.

இந்தச் செயலுக்காக 5 யூடியூபா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும். இவா்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை, முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்’ என்று உத்தரவிட்டனா்.

பெட்டி..

வழிகாட்டுதல்களை வகுக்க

மத்திய அரசுக்கு உத்தரவு

இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுத்து, அதன் விவரத்தை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

அப்போது, ‘இதுதொடா்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கி வருகிறது’ என்று வெங்கடரமணி பதிலளித்தாா்.

பிரேக்...

வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.

5 யூடியூபா்களும் மன்னிப்புக் கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும்.

- நீதிபதிகள்

ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரி குறைப்பால், டிவி, ஏசி, கார் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொ... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் கால... மேலும் பார்க்க

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க