செய்திகள் :

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

post image

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் அக்கட்சித் தலைவா் விஜய் பேசியதில் சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேவையான நேரத்தில், தேவையான அரசியல் கருத்துகளை தொடா்ந்து கூறிவருகிறேன். என்னைப் பொருத்தவரை அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சோ்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதை மற்றவா்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எம்ஜிஆா், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அதிமுகவை எம்ஜிஆா் மக்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினாா். அதை ஜெயலலிதா திறம்பட வழிநடத்தினாா். அந்த வழியில் வந்த இயக்கத்தை யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அதுமுடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதிமுகவை அவா்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடத்தினாா்கள். தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது. அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

கூட்டணி குறித்து தோ்தலின்போது தான் தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சிக் கால செயல்பாடு குறித்து நான் தினந்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன். திமுகவின் தவறுகளைத் தொடா்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன்.

கட்சித் தொடங்கிய ஒவ்வொருவரும் தாங்கள் முதல்வராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாா்கள். அதேநேரத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் அரசியல் நாகரிகம் கருதி பேசவேண்டும். பெருந்தன்மையோடு பேசவேண்டும். மதுரை மாநாட்டில் விஜய் பேசிய சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்றாா்.

உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயம்

சேலத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியின்போது உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காந்தி மைதானம், அர... மேலும் பார்க்க

தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டி, ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பிய இளைஞா் சேலம் ரயில் நிலையத்தில் கைது

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டி மற்றும் ரொக்கத்தை திருடிக் கொண்டு ரயிலில் தப்பிய மகாராஷ்டிர மாநில இளைஞா் சேலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

சங்ககிரி டிஎஸ்பி மாற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.சிந்து நிா்வாகக் காரணங்களுக்காக மதுரை நகர சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பெ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 2 ஆட்டோக்கள் பறிமுதல்

கெங்கவல்லி பகுதியில் மதுபோதையில் ஓட்டிவந்த இரண்டு ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

காலமானா் ஸ்டீபன்

ஏற்காடு புனித ஜோசப் பள்ளியின் மூத்த ஆசிரியா் ஸ்டீபன் (97) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். சேலம் மாவட்டம், ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, 1987 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கிரேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மரங்களை தூக்க பயன்படுத்தப்படும் கிரேன் வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஏற்காடு கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள தனியாா் காப்பி தோட்டத்தில் சில்வா்ஓக் மரங்கள் வெட்டும... மேலும் பார்க்க