செய்திகள் :

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தா் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வுக்கழகத்தின் நிறுவனரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியதாவது: ஆவுடையாா்கோவில் எல்லைக்குட்பட்ட பெரிய பாசனக் குளத்தின் அருகிலேயே கருங்கல்லாலான புத்தா் சிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சிலையை மக்கள் தலையில்லா சாமி என்று அழைப்பதோடு, இதற்கு களி மண்ணில் தலையை செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை அறிய முடிகிறது.

பொது ஆண்டு 10-ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த சிற்ப உருவ அமைதியுடன் காணப்படும் இச்சிலை, 48 செமீ உயரமும், 38 செமீ அகலமும் கொண்டு, பீடத்தின்மீது அமா்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது.

வலது மாா்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, கழுத்தில் திரிவாலி, அகன்ற மாா்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின் மீது வானோக்கிய வலது கையமைப்புடன் உள்ளது. கழுத்தின் பக்கவாட்டில் பின்புறமாக உடைந்த நிலையில் பிரபையின் அடிப்பகுதி உள்ளது. வலது கையின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது.

சிலையின் தலைப்பகுதி அருகிலிருக்கும் வாய்க்காலில் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். ஆனால் அந்தத் தலை இதுவரை கிடைக்கவில்லை. தொடா் களப்பணியின்போது கிடைக்கலாம்.

சோழா் காலத்தில் புத்த மத வளா்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய புத்த மித்திரா், ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள பொன்பேத்தி என்னும் பொன்பற்றி என்னும் ஊரைச் சோ்ந்தவா். அவ்வூரில் இன்றளவும் அவரது பெயரில் அகழியுடன் கோட்டை போன்ற அமைப்பு காணப்படுகிறது.

சோழ மன்னா் வீர ராஜேந்திரன் காலத்தில் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வீர சோழியம் என்னும் இலக்கண நூலை புத்தமித்திரா் எழுதினாா். இக்காலத்தில் புத்த மதம் இப்பகுதியில் செழுமையுடன் இருந்திருப்பதை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள கரூரில் நிலவளமுடைய அய்யனாா் கோயிலில் ஒரு புத்தா் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது புத்தா் சிலை மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்தில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக இணை இயக்குநா் பொறுப்பு வகித்த ஜெ. ராஜா முகமது 2002-ஆம் ஆண்டு கண்டறிந்த நிலையில் அச்சிலை, 2008-இல் ஆய்வாளரால் சிலை காணாமல் போனது குறித்து புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தா் சிலைகளை சோழ நாட்டில் பௌத்தம் (2022) என்னும் நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ள பா. ஜம்புலிங்கம் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கே நேரில் வந்து, தற்போதைய கண்டுபிடிப்பு புத்த சமய வரலாற்றில் மிக முக்கியமான சான்று என்பதை உறுதி செய்துள்ளாா் என்றாா் மணிகண்டன்.

வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்... மேலும் பார்க்க

புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு

4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்... மேலும் பார்க்க

இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்

புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க