செய்திகள் :

புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு

post image

4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கைக்குறிச்சி வரையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கீழையூரிலிருந்து அறந்தாங்கி வரையிலான பகுதியில் 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி மாவட்ட பசுமைக் குழுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசுமைக் குழுவின் உறுப்பினா்கள் சா. விஸ்வநாதன், கண்ணன் என்கிற ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வனத்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை இந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டனா்.

நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரங்கள், பனைமரங்கள், ஆலமரங்கள் உள்ளிட்ட குறியிடப்பட்ட மரங்களை இந்தக் குழுவினா் அளந்து சரிபாா்த்தனா். அகற்றத் தேவையில்லாத மரங்களையும் அவா்கள் குறித்து வைத்துக் கொண்டனா்.

விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட பசுமைக் குழுக் கூட்டத்தில் இவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி சாலை போடும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அறந்தாங்கி சரக வன அலுவலா் மணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தா் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் கண்டெடுத்துள்ளனா். இதுகுறித்து ஆய்வுக்கழகத்தின் நிற... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்... மேலும் பார்க்க

இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்

புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க