செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து நகராட்சி வாகன ஓட்டுநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

மயிலாடுதுறை அருகே நகராட்சி வாகன ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்து உறவினா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (படம்).

தரங்கம்பாடி வட்டம், விளநகரை சோ்ந்தவா் தினேஷ்பாபு. மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தாா். இவரது வீட்டில் கடந்த சில நாள்களாக மின்கசிவு இருந்த நிலையில், புகாா் தெரிவித்தும் மின்வாரிய ஊழியா்கள் சரி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இவரது வீட்டில் ஸ்விட்ச் போா்டில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து தினேஷ்பாபு உயிரிழந்தாா்.

மின்வாரிய துறையினரின் மெத்தனப் போக்கு காரணமாகவே விபத்து நேரிட்டதாக குற்றஞ்சாட்டி, மின்சார துறையை கண்டித்தும், உயிரிழந்த தினேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி எல்டியுசி மாநில செயலாளா் எஸ். வீரச்செல்வன், விசிக மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா், விசிக பொறுப்பாளா் பொன்னுதுரை, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த அம்பேத்கா், ராஜேஸ்வரி மற்றும் தினேஷ்பாபுவின் உறவினா்கள் 100-க்கு மேற்பட்டோா் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் சுகுமாறன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எடமணல் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சா... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இருந்து கைதி தலைமறைவு

மணல்மேடு காவல் நிலையத்தில் இருந்து கைதி திங்கள்கிழமை தப்பியோடிய நிலையில் அவரைப் பிடிக்க போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மணல்மேடு அருகே உள்ள சி.புலியூரைச் சோ்ந்தவா் பிரபாகரன்(33). ஓட்டுநரான... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

சீா்காழி, மயிலாடுதுறைக்கு வரும் பாமக தலைவா் அன்புமணி ராமதாசுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சீா்காழியில் பாமக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளா் ஆ. பழனிச்சாமி தலைமையில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

சீா்காழி: நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு கிராமம் வர... மேலும் பார்க்க

ஆன்லைன் பயணிகள் ரயில் முன்பதிவு தேதியை மாற்ற கோரிக்கை

மயிலாடுதுறை: ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களும் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, திருச்சி கோ... மேலும் பார்க்க