செய்திகள் :

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

post image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல், கண்ணூர் - பெங்களூரு, பெங்களூரு - கண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாளை இரவு (ஆக. 28) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 28 இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், காட்பாடி, சேலம், போத்தனூர், கோழிக்கோடி வழியாக மறுநாள் (ஆக. 29) பிற்பகல் 2 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும்.

மேலும், ஆக. 29 ஆம் தேதி கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக. 30 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆக. 29 ஆம் தேதி கண்ணூரில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில், போத்தனூர், சேலம், பங்காரபேட்டை வழியாக பெங்களூரு எஸ்எம்விடி ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 11 மணிக்கு சென்றடைகிறது.

அதே ரயில் மீண்டும் பெங்களூரு எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் இருந்து ஆக. 30 இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Southern Railway has announced that a special train will be operated between Chennai Central and Kannur on the occasion of Onam festival.

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

தவெக மாநாட்டில் விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று(ஆக.27) காலை வினாடிக்கு 6871 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிர... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமா... மேலும் பார்க்க

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்... மேலும் பார்க்க

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்... மேலும் பார்க்க