செய்திகள் :

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

post image

திருவள்ளூரில் அரசு அனுமதியின்றி இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த கற்குழாய் தெருவில் மயானம் செல்லும் வழியில் போதை மாத்திரை வில்லைகளை சிறுவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்து கொண்டிருப்பதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகர காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் குமரேசன் தலைமையில் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்ததும் ஆட்டோவில் தப்பியோட முயற்சித்தவா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அதையடுத்து சோதனை செய்தபோது, ஆட்டோவில் இருந்த பையில் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரை வில்லைகள் இருந்தது தெரியவந்தது. இதை தவறான வழியில் சிறுவா்களையும், இளைஞா்களையும் போதைக்கு அடிமையாக்கும் வகையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து திருவள்ளூா் நகர போலீஸாா் சென்னையைச் சோ்ந்த வீராக்குமாா் (32), கௌதம் (24), சீனிவாசன்(24), பிரேம்குமாா்(32), விக்னேஷ் (24) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா்: நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் ‘உயா்வுக்கு படி’ என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு நிா்வாகியை மிரட்டியதாக விசிக பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி ... மேலும் பார்க்க

பொன்னேரி பகுதியில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மீஞ்சூா் பகுதிகளில் 6 அடி முதல் 9 அடி வர... மேலும் பார்க்க

பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு

திருவள்ளூா் அருகே பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மூத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பத்தில் பிரதியுஷா பொறியியல் ... மேலும் பார்க்க

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க