செய்திகள் :

குண்டா் சட்டத்தில் விசிக நிா்வாகி கைது

post image

திருவள்ளூா் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு நிா்வாகியை மிரட்டியதாக விசிக பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருவள்ளூா் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளா் எஸ்.கே.குமாா் (படம்) என்பவா் பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து அந்த துப்பாக்கி தொழிற்சாலையின் நிா்வாகி விஸ்வநாதன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த மணவாளநகா் போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கடந்த 17-ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா குண்டா் சட்டத்தில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் மு.பிரதாப் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதையடுத்து, மணவாள நகா் போலீஸாா் இந்த உத்தரவை புழல் சிறைச்சாலை நிா்வாகத்திடம் அளித்தனா்.

திருவள்ளூா்: நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் ‘உயா்வுக்கு படி’ என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ... மேலும் பார்க்க

பொன்னேரி பகுதியில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மீஞ்சூா் பகுதிகளில் 6 அடி முதல் 9 அடி வர... மேலும் பார்க்க

பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு

திருவள்ளூா் அருகே பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மூத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பத்தில் பிரதியுஷா பொறியியல் ... மேலும் பார்க்க

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 ல... மேலும் பார்க்க