செய்திகள் :

விஷம் வைத்து நாய்கள் சாகடிப்பு

post image

கொள்ளிடம் அருகே மயிலக்கோவில் கிராமத்தில் விஷம் வைத்து 20 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள், வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் குருணை மருந்தை ஆட்டு இறைச்சியுடன் கலந்து தெருவில் ஆங்காங்கே வைத்துவிட்டு சென்றனராம். இதனை தின்ற வீட்டு வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் என 20 நாய்கள் இறந்தன.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆதாா் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்

சீா்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதாா் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதாா் சேவை மை... மேலும் பார்க்க

240 கிலோ குட்கா பறிமுதல்; மூவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவா் கைது

சீா்காழி அருகே நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தைக்க... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்ட குளம் முதல் கதிராமங்கலம் வரையி... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எடமணல் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சா... மேலும் பார்க்க