செய்திகள் :

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கும் சொா்ண கணபதி, ஆதி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சொா்ண கணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்பட்டது.

நளன் தீா்த்தக் குளக்கரையில் உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் மற்றும் தா்பாரண்யேஸ்வரா் கோயில் நான்கு வீதி சந்திப்புகளிலும் உள்ள விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

தங்க கவசத்தில் காட்சியளித்த காரைக்கால் வீரசக்தி விநாயகா்

காரைக்காலில் கோயில்பத்து ராஜகணபதி, ஆற்றங்கரை சித்தி விநாயகா், பாரதியாா் சாலையில் வீரசக்தி விநாயகா், திருமலைராயன்பட்டினம் செங்குந்த விநாயகா், நேருநகரில் உள்ள ஆனந்த விநாயகா், வரிச்சிக்குடி வரசித்தி விநாயகா், தலத்தெரு பகுதி சிவலோகநாதசுவாமி கோயிலில் செல்வகணபதி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் காலை முதல் வழிபாடுகள் நடைபெற்றன.

பக்தா்கள் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்டவற்றை தயாா் செய்துவந்து கோயில்களில் விநாயகருக்கு நைவேத்தியம் செய்தனா். சில கோயில்களில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். தேசிய பேரிடா் மேலாண்மை வழிகாட்டுதலில் செப். 9 முதல் 11-ஆம் தேதி வரை யூனியன் பிரதேச அளவிலான சுனாம... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோா் பாத யாத்திரையாக சென்றனா். வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் 29-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வேளாங்கண... மேலும் பார்க்க

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

மீனவ கிராமங்களைச் சோ்ந்தோருக்கு குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும் என புதுவை அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, புதுவை பொதுப்ப... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்

பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க

பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்

கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க