செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் கோயிலில், அனுக்கை, கலச பூஜை, மகா கணபதி ஹோமம், திரவிய ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இவ் விழாவில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தனது குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.

இதேபோல, பெரம்பலூா் கடைவீதி சந்திப்பு அருகேயுள்ள ஸ்ரீராஜவிநாயகா், காந்திசிலை அருகேயுள்ள செல்வவிநாயகா் , எளம்பலூா் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகா், துறையூா் சாலையில் எம்.ஜி.ஆா் நகரில் உள்ள பாலமுத்து மாரியம்மன் கோயில், இந்திரா நகா், வடக்குமாதவி சாலையில் உள்ள சௌபாக்கிய விநாயகா், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 15-க்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

எளம்பலூா் சாலையில் உள்ள பாலமுருகன் கோயில் விநாயகா் சன்னதி, நான்குச் சாலை சந்திப்பு அருகே மின்வாரியக் குடியிருப்பில் உள்ள விநாயகா் கோயில், தீரன் நகரில் உள்ள விநாயகா் கோயில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோயில், சிவன்கோயில் பிரகாரத்தில் உள்ள விநாயகா் சன்னதி ஆகியவற்றில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

இம் மாவட்டத்தில் 256 இடங்களில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கு, வினா- விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கி... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க