செய்திகள் :

அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவராகவும், 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாகவும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சென்னையில் 45 நாள்கள் தங்கி, பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் அளிக்கப்படும்.

பயிற்சியை முடிக்கும் இளைஞா்களுக்கு தனியாா் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அளித்து, ஆரம்பகால மாத சம்பளமாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை பெறலாம். பயிற்சி பெற விரும்புவோா் பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கு, வினா- விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கி... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கி... மேலும் பார்க்க