ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண்: 06009) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கண்ணூா் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 29) இரவு 9.30 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூா் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு 7 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - கண்ணூா் விரைவு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.