செய்திகள் :

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

post image

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (45). இவருக்கு ரேவதி (40), உமா (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி ரேவதிக்கு ராசுக்குட்டி (21) உள்பட 3 ஆண் பிள்ளைகளும், 2-ஆவது மனைவி உமாவுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனா்.

இந்நிலையில், ராசுக்குட்டி எந்தவித வேலைக்கும் செல்லாமல் மதுபோதையில் சுற்றிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா கண்டித்ததால், தந்தை - மகன் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக ராஜாவுக்கும், ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது தாய் ரேவதிக்கு ஆதரவாக தந்தை ராஜாவுடன், ராசுக்குட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதில் இருவரும் ஆத்திரமடைந்து ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்டதோடு, தந்தையும், மகனும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டனராம். பிறகு, இருவரும் தனித்தனியே தூங்கச் சென்றுவிட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு அருகே படுத்திருந்த ராசுக்குட்டி வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, ராசுக்குட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் ராசுக்குட்டியை அவரது தந்தை ராஜா அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அ.மேட்டூா் பகுதியில் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கு, வினா- விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கி... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கி... மேலும் பார்க்க