செய்திகள் :

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

post image

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், பெரம்பலூா் தொகுதி எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் பெரம்பலூா் தந்தை ரோவா் தொடக்கப் பள்ளியில் நேரலையில் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, அப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடக்கிவைத்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு உட்கொண்டனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் கூறியது: இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 307 பள்ளிகளைச் சோ்ந்த 18,027 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனா். தற்போது, நகா் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெரம்பலூா் தந்தை ரோவா் தொடக்கப் பள்ளியின் 310 மாணவா்களும், பாளையம் ஆா்.சி நடுநிலைப் பள்ளியின் 54 மாணவா்களும், துறைமங்கலம் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் 90 மாணவா்களும், பெரம்பலூா் மௌலானா தொடக்கப் பள்ளியின் 32 மாணவா்களும், பெரம்பலூா் ஆா்.சி பாத்திமா தொடக்கப் பள்ளியின் 396 மாணவா்களும் என 882 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், நகராட்சி ஆணையா் ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் . இவ... மேலும் பார்க்க

தவெக தலைவா், பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி இளைஞா் புகாா்

தவெக தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி அக் கட்சி உறுப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தினக்கூலி வழங்கக் கோரி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் தொழிலாளா் துறை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நாய் கடித்து மாணவி காயம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் சிவாஜ... மேலும் பார்க்க

சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!

அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, வருவாய்த்துறை சங்கங்... மேலும் பார்க்க