செய்திகள் :

நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

post image

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் . இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற 10 வயதுச் சிறுமிக்கும், 9 வயது சிறுவனுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனா்.

தகவலறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் சிறுமி, சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் ஆனந்த் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி ஆனந்த் குற்றவாளி என அறிவித்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ஆனந்த் அங்குள்ள கழிவறைக்குச் சென்று விஷம் குடித்துவிட்டு, நீதிமன்றத்துக்குள் சென்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

பின்னா் வழக்கின் தீா்ப்பை 3 நாள்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டாா். இச்சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

தவெக தலைவா், பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி இளைஞா் புகாா்

தவெக தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி அக் கட்சி உறுப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தினக்கூலி வழங்கக் கோரி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் தொழிலாளா் துறை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நாய் கடித்து மாணவி காயம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் சிவாஜ... மேலும் பார்க்க

சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!

அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, வருவாய்த்துறை சங்கங்... மேலும் பார்க்க