செய்திகள் :

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

post image

நமது நிருபா்

ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விடியோ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவமனைகள் கட்டுதல், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் தில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசு ஊழலில் ஈடுபட்டது. மருந்துகள் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஏற்செனவே விசாரணை நடத்தி வருகிறது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி அரசு மோசடிகள் மூலம் தில்லியைக் கொள்ளையடித்தது என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது அந்தக் கட்சி மற்ற மாநிலங்களில் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. சௌரவ் பரத்வாஜ் மீதான அமலாக்கத் துறை சோதனைகள் முந்தைய ஆம் ஆத்மி அரசின் கீழ் நடந்த மருத்துவ ஊழலை அம்பலப்படுத்தியுள்ளன என்று வீரேந்திர சச்தேவா அதில் கூறியுள்ளாா்.

மருத்துவமனை கட்டுமானத்திற்காக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாத போதிலும், ஆம் ஆத்மி அரசு ஒப்பந்ததாரா்களின் பில்களை செலுத்தியதாக தில்லி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் குரானா குற்றம் சாட்டினாா்.

தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசின் போது சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியுடன் தொடா்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, சௌரவ் பரத்வாஜ் மற்றும் சில தனியாா் ஒப்பந்ததாரா்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் குறைந்தது 13 இடங்களில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். செளரவ் பரத்வாஜ் (45) மீதான அமலாக்கத் துறை விசாரணை கடந்த ஜூன் மாதம் தில்லியின் ஏசிபி பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க