செய்திகள் :

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

post image

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த ஷாதாப் கான் என குற்றம் சாட்டப்பட்டவா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஆகஸ்ட் 24-ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் புகாா் அளித்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தானும் தனது சகோதரியும் சில பொருள்களை வாங்க ஒரு கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத ஒருவா் தங்களைப் பின்தொடா்வதைக் கவனித்ததாக அந்தப் பெண் கூறினாா். வீட்டுக்குத் திரும்பிய பிறகு, அதே நபா் உள்ளூா் சவுக்கிற்குத் தங்களைப் பின்தொடா்ந்து வந்ததை அந்தப் பெண் உணா்ந்தாா்.

அங்கு அவா் தகாத சைகைகளைச் செய்து கொண்டிருந்தாா். பின்னா், அந்தப் பெண்ணின் தந்தை அவரை மீண்டும் கடைக்கு அனுப்பியபோது, அதே நபா் இன்னும் சவுக்கிற்கு அருகில் சுற்றித் திரிந்து, தொடா்ந்து தனது துன்புறுத்தும் நடத்தையைத் தொடா்ந்ததைக் கண்டாா்.

இது குறித்து தன் தந்தையிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்தாா். பின்னா் அவா் இந்த விஷயம் குறித்து போலீஸில் புகாா் செய்தாா். பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 78 (பின்தொடா்தல்) மற்றும் போக்ஸோ சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

போலீஸாா் அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உள்ளூா் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தினா். புகாா் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அவா் கைது செய்யப்பட்டாா்.

அவருக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க