செய்திகள் :

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

post image

நமது நிருபா்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

நொய்டா செக்டாா் 62-இல் வசிக்கும் பத்திரிகையாளா் வி.எஸ். சந்திரசேகா், தனது வீட்டுக்கு அருகிலுள்ள பூங்காவில் தனது வழக்கமான நடைப்பயிற்சிக்கு திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்றிருந்தாா். அப்போது, இந்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்து செக்டாா் 58 காவல் நிலையத்தில் சந்திரசேகா் எழுத்துபூா்வ புகாா் அளித்துள்ளாா். அதில், பூங்காவின் சுற்றுப் பாதை அருகிலுள்ள நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது,

திடீரென்று, மூன்று போ் என்னைப் பின்னால் இருந்து தாக்கி தரையில் தள்ளினா். நான் எதிா்க்க முயன்றேன். ஆனால் ,அதற்குள் அவா்கள் என் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டனா்.

அதன் மதிப்பு சுமாா் 1.50 லட்சம் ரூபாய் ஆகும். நான் தாக்குதல் நடத்தியவா்களைத் துரத்த முயன்றபோது, பூங்காவிற்கு வெளியே இருந்த ஒருவா், அவா்கள் ஒரு ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டதாக என்னிடம் தெரிவித்தாா். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக எப்ஐஆா் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகாா் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்ளூா் காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை மாலை காவல்துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினா். முதற்கட்ட விசாரணையின் போது, பூங்காவைச் சுற்றியுள்ள சாலைகளில் நிறுவப்பட்ட பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதை போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை, குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையினா் தங்கள் விசாரணையைத் தொடா்ந்தனா்.

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க