செய்திகள் :

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

post image

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நாடுகள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா கண்டத்தில் இருப்பதாகவும், அவை உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடைக்கான தேவையில் நான்கில் மூன்று பங்கை கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்தியப் பொருள்கள் மீது பதிலடி வரி என்ற பெயரில் அமெரிக்க அதிபர் 25 சதவீத வரி விதித்தார். அடுத்தகட்டமாக ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றுகூறி கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார். இந்த கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

இது இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. முக்கியமாக ஜவுளி தொழில், இறால் ஏற்றுமதி, காலணி உள்ளிட்ட தோல் பொருள்கள், ரசாயனங்கள், சில மின்னணு மற்றும் இயந்திர சாதனங்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தியாளர்களையும், இத்துறையில் உள்ள தொழிலாளர்களையும் பாதிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை ஆலோசிக்க மத்திய வர்க்க அமைச்சகம் பல்வேறு துறையினருடன் தொடர் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் இதுவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதற்காக ரசாயனம், நவரத்தினங்கள், நகை உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய வர்த்தக அமைச்சகம் விரைவில் ஆலோசிக்க உள்ளது. அப்போது ஏற்றுமதிக்கான மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இருந்து அதிக மதிப்பாலான பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைவிட சுமார் இரண்டு மடங்கு அளவுக்கு மதிப்புக்கு அந்நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க

நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்ற... மேலும் பார்க்க