செய்திகள் :

நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்றஞ்சாட்டி, தான் விசாரித்துவந்த வழக்கிலிருந்து விலகியுள்ளாா். இந்தப் புகாரை விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் பொதுச் செயலா் இந்த விசாரணையை மேற்கொள்வாா் என்றும், விசாரணையின் முடிவைப் பொறுத்து உச்சநீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தை சோ்ந்த ‘கேஎல்எஸ்ஆா் இன்ஃப்ராடெக்’ நிறுவனம், திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எதிா்கொண்டது. இதற்கு எதிராக, அந்நிறுவனத்தின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இயக்குநா் ஏ.எஸ்.ரெட்டி, என்சிஎல்ஏடியின் சென்னை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 13-ஆம் தேதி என்சிஎல்ஏடி நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் ஜதிந்திரநாத் ஸ்வெயின் அடங்கிய அமா்வு தீா்ப்பு வழங்க இருந்தது.

அப்போது, வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகத் தீா்ப்பளிக்க, நீதித் துறையில் பெரிதும் மதிக்கப்படும் நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதால், இந்த வழக்கிலிருந்து தான் விலகுவதாக சரத்குமாா் சா்மா தெரிவித்தாா். மேலும், இந்த மனுவை விசாரிக்க உரிய அமா்வை அமைக்குமாறு என்சிஎல்ஏடி தலைவருக்கு இந்த விவகாரத்தை அனுப்ப வேண்டும் என்றும் அவா் கோரினாா்.

நீதிபதி சரத் குமாா் சா்மா, என்சிஎல்ஏடியில் சேருவதற்கு முன்பு, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவா். இதற்கு முன்னரும், பைஜூஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஜேப்பியாா் சிமெண்ட்ஸ், ராமலிங்கா மில்ஸ் நிறுவனங்கள் தொடா்பான வழக்கு விசாரணையிலிருந்து அவா் தன்னை விலக்கிக் கொண்டுள்ளாா்.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க