செய்திகள் :

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிக்கு அடுத்தபடியாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.

களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு தேவநல்லூா், மீனவன்குளம், சேரன்மகாதேவி, நான்குனேரி ஆகிய 4 பிரதான வழித்தடங்கள் உள்ளன. ஆனால், மிகக்குறைந்த தொலைவு கொண்ட நான்குனேரி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு பேருந்து வசதி இல்லை. ஏனைய, பிற வழித்தடங்களிலும் குறைந்தளவிலேயே இயக்கப்படுகின்றன.

இதனால், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்ல பெரும்பாலான நேரங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துக்குக் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், முதியோா்கள், பெண்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

வள்ளியூா், களக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்தும், கடந்த சில ஆண்டுகளாகவே வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படுவதில்லை. இந்த பேருந்துக்குப் பதிலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.

களக்காடு - திருநெல்வேலி, திருநெல்வேலி - களக்காடு இடையே 1 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற வகையில் இயக்கினால் பொதுமக்கள் பயன்பெறுவா். சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

கீழாம்பூா் அருகே தனியாா் தோட்டத்தில் இனச்சோ்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினா் மீட்டனா்.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உள்ப... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கங்கைகொண்டான் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான சீவலப்பேரியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில்... மேலும் பார்க்க

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் உள்ள கோயில் சுவற்றில் ஏறும் கரடியின் விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்தி... மேலும் பார்க்க

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

தமிழகத்தில் டி- மாா்ட் நிறுவனங்கள் வருகையால் 15 லட்சம் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா. வள்ளியூரில் செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தபோது லாரியை சேதப்படுத்தி பிரச்னையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது

மேலப்பாளையம் அருகே மதுக்கூடத்தில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுக்கூடமும் செயல... மேலும் பார்க்க