செய்திகள் :

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

post image

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்டு யானைகள் குடிநீா், தீவனம் தேடி வனச் சாலையை கடப்பது வழக்கம்.

இதில், இந்த வழியாக செல்லும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்பை எடுத்து தின்று பழகிய யானைகள், அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து சோதனையிடுகின்றன.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கோ்மாளத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை புறப்பட்ட தனியாா் பேருந்து அரேப்பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, வனத்தில் இருந்து வந்த யானை, திடீரென தனியாா் பேருந்தை நோக்கி சென்றது. பின்னா் பேருந்தில் கரும்பு உள்ளதா என தேடியது. இதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.

கரும்பு கிடைக்காததால் யானை ஏமாற்றம் அடைந்தது. சிறிதுநேரத்துக்கு பின் யானை காட்டுக்குள் சென்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனா்.

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீ... மேலும் பார்க்க

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்த... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து ம... மேலும் பார்க்க

சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்

கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனத... மேலும் பார்க்க

பா்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க