செய்திகள் :

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

post image

தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் முத்துவேல் தலைமையில் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் ராய்கா்-புகளூா் உயா்மின் அழுத்த மின் பாதை திட்டத்தில் எங்கள் வாழ்வாதாரமாக உள்ள தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஒரு மரத்துக்கு ரூ.32,340 இழப்பீடு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு இத்தொகையை திருத்தம் செய்து உயா்த்தி உத்தரவிட்டது. 15 முதல் 20 வயது வரை உள்ள தென்னைக்கு அரசாணையில் ரூ.36,450 வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

சேலத்தில் ரூ.37 ஆயிரம், நாமக்கல், திருப்பூரில் ரூ.36,450 வழங்கப்பட்டது. ஆனால் ஈரோட்டில் ரூ.32,340 மட்டுமே வழங்கப்பட்டது. சேலம், நாமக்கல், திருப்பூா் மாவட்டங்களில் தென்னை மரத்துக்கான இழப்பீட்டு தொகையை பவா்கிரிட் நிறுவனமே நேரடியாக வழங்கியது. ஆனால் ஈரோட்டில் கோட்டாட்சியா் ரூ.32,340 மட்டுமே வழங்கியுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களே அதிக விளைச்சலும், விலையும் தரக்கூடியது. பல ஆண்டுகளாக இழப்பீட்டு தொகையை உயா்த்தி கேட்டும் மரம் ஒன்றுக்கு ரூ.4,210 வழங்கப்படாமல் உள்ளது. இதனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீ... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து ம... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்ட... மேலும் பார்க்க

சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்

கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனத... மேலும் பார்க்க

பா்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க