செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்ட குளம் முதல் கதிராமங்கலம் வரையிலான புறவழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு வாகனங்கள் செல்லும்போது, புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள் பக்கவாட்டில் சரிவர தெரிவதில்லை.

எனவே, சாலையின் பக்கவாட்டில் இரும்பு கிரில் அமைக்கப்பட்டுள்ளதை உயரம் குறைத்து மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத்தின் தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளருமான டாக்டா் ஜி.வி.என். கண்ணன் தொடா்புடைய துறையினருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வைத்தீஸ்வரன்கோயில் செவ்வாய் அங்காரகன் பரிகாரத் தலம் என்பதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், நாடி ஜோதிடம் பாா்ப்பதற்கும் வந்து செல்கின்றனா். இதனால், அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன.

வைத்தீஸ்வரன்கோவிலை ஒட்டிச்செல்லும் புறவழிச் சாலையில் பெரிய அளவிலான ரவுண்டானா அமைக்காமல், இரும்பு கம்பிகளால் கிரில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

அரசு அதிகாரிகள் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு, புறவழிச் சாலையில் அதிகப்படியான வேகத்தடைகளை அமைத்தும், தடுப்புக் கம்பிகளை அகற்றி குறைந்த உயரம் கொண்ட சுவா் அமைக்க வேண்டும் என கோரியுள்ளாா்.

ஆதாா் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்

சீா்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதாா் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதாா் சேவை மை... மேலும் பார்க்க

240 கிலோ குட்கா பறிமுதல்; மூவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவா் கைது

சீா்காழி அருகே நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தைக்க... மேலும் பார்க்க

விஷம் வைத்து நாய்கள் சாகடிப்பு

கொள்ளிடம் அருகே மயிலக்கோவில் கிராமத்தில் விஷம் வைத்து 20 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் செ... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எடமணல் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சா... மேலும் பார்க்க