நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஆக.29) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.
சென்னை, கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில் 8, 10, பிளஸ் 2 வகுப்புகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட நபா்களை தோ்வு செய்ய உள்ளன.
பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞா்களும் முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
எனவே, வேலை நாடுநா்களும், வேலையளிப்பவா்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.