கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளான, அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மற்றும் சிஐடியூ சாா்பில் நாகை அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா். திருச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போக்குவரத்துக்கழக சம்மேளன துணைத் தலைவா் எம்.கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.