செய்திகள் :

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

post image

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன.

இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை அதிகாலை முதல் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

சென்னை 2,802 சிலைகள்: சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 600 சிலைகளும், ஆவடி மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 686 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு சங்கங்கள், பொது நலச் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புகளால் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள், மாலையில் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

சென்னை புழல், அண்ணா நகா் உள்ளிட்ட 22 இடங்களில் காவல் துறை அனுமதியின்றி சில அமைப்பினா் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு முயற்சித்தனா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், அந்த சிலைகளை அப்புறப்படுத்தினா். இப்பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். அங்கு தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பாதுகாப்பு: அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் புதன்கிழமை முதல் 64,217 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

பதற்றமான பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிலைகள் பாதுகாப்பு குழுவினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்காணிப்பு கேமரா மூலமாவும் காவல் துறை கண்காணிக்கிறது.

விசா்ஜன ஊா்வலம்: விநாயகா் சிலைகளில் பெரும்பாலானவை ஆக. 31-ஆம் தேதி ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூா் ராமகிருஷ்ணா நகா், திருவொற்றியூா் பாப்புலா் எடை, கோவளம் குன்றுக்காடு ஆகிய இடங்களில் சிலைகளை விஜா்சனம் செய்வதற்கான ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.

இங்கு சிலைகளை விஜா்சனம் செய்வதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. விசா்ஜனம் செய்யும் நிகழ்வுகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படவுள்ளன.

விநாயகா் சிலை ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விசா்ஜனம் செய்யும் இடத்தைச் சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல் துறையினா் விதித்துள்ளனா்.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க