செய்திகள் :

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

post image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுதொடா்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் வினித் தலைமையிலான குழுவினா், தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தனா். போலி ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் உறுப்பு மாற்று சிகிச்சை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் அவா்கள் வலியுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சிறுநீரக முறைகேடு தொடா்பாக மதுரை மாவட்ட உறுப்பு மாற்று சிகிச்சை அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சுகாதார அதிகாரிகள், மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் 9 பேரும் அனுமதி அளித்தது தொடா்பாக விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் நேரடியாக அவா்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க