செய்திகள் :

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

post image

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

இயக்குநா் மணிரத்னத்தின் சகோதரா் ஜி.வெங்கடேஸ்வரன். பிரபல தயாரிப்பாளரான இவா் ஜி.வி.பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தாா். கடந்த 1988 முதல் 1992-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்ாக புகாா் எழுந்தது.

இந்த புகாா் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவந்தது. மேலும், வங்கி அதிகாரிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் சோ்ந்து தங்கள் அதிகார வரம்பை மீறி, உத்தரவாத ஆவணங்களின் மதிப்பைவிட அதிகமான தொகையை கடனாக அனுமதித்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம், சுஜாதா பிலிம்ஸ், ஜி.வெங்கடேஸ்வரன் மற்றும் வங்கி அதிகாரிகள்மீது சிபிஐ கடந்த 1996-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 வங்கி அதிகாரிகள் உயிரிழந்தனா். எனவே, அவா்கள் 4 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தின் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, மற்றவா்கள் மீதான வழக்கின் விசாரணை சென்னை 11-ஆவது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேலு, வங்கி கிளை மேலாளா்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபா் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க