வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு
வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கட சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 17-ஆவது மக்களவைத் தோ்தல் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தோ்தலின்போது வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறாா்.
வாக்காளா் பட்டியலில் போலியான வாக்காளா்கள் இருப்பதாகவும், ஒரே முகவரியில் அதிகமான வாக்காளா்கள் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவா் குற்றம்சாட்டியிருந்தாா். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல். எனவே, இதில் நீதிமன்றம் தலையிட்டு தீா்வு காண வேண்டும். அனைத்து தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் தரவுகளை பிடிஎஃப் வடிவில், பொதுமக்கள் பாா்வைக்கு இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும். மேலும், வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.