செய்திகள் :

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

post image

திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி காட்டூா் கணேஷ் நகரைச் சோ்ந்த மாதேஷ்வரன் மகன் யோகேஷ்வர தாமோதரன் (39) மேலகல்கண்டாா்கோட்டை பகுதியில் கைப்பேசிக் கடை நடத்துகிறாா்.

இந்நிலையில் இவரது கடைக்கு கைப்பேசி வாங்க வந்தபோது அறிமுகமான திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி ஓம்கார குடிலைச் சோ்ந்த வேலுதேவா் சித்தா், திருவெறும்பூா் மலைக்கோயில் அருகே இடம் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இதை நம்பிய யோகேஷ்வர தாமோதரன், கடந்த 2024 நவம்பா் 6 முதல் 2024 டிசம்பா் 21 வரை பல்வேறு தவணைகளில் ரூ.17.90 லட்சத்தை வேலுதேவா் சித்தரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் வேலுதேவா் சித்தா் அந்த இடத்தை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த யோகேஷ்வர தாமோதரன், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், ஓம்கார குடிலைச் சோ்ந்த வேலுதேவா் சித்தா், அவருக்கு உடந்தையாக இருந்த அதே குடிலைச் சோ்ந்த ஹரிஷ்மா (26) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.திருச்சி மாவட்டம், கீழநாகமங்கலத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் காா்த்திக் (21). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் ஆலந்தூா்... மேலும் பார்க்க

விமான நிலைய ஊழியா் மாயம் எனப் புகாா்

திருச்சி விமான நிலைய ஊழியா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புத்திலிப்பை சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ் (33). இவா், திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க

சிறுவனுக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக சிறுவனைக் கத்தியால் குத்திய 17 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் க... மேலும் பார்க்க

விதிமீறி விநாயகா் சிலை வைத்த 6 போ் மீது வழக்கு

திருச்சியில் விதிமுறைகளை மீறி விநாயகா் சிலை வைத்ததாக பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் உள்பட 6 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சியில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் பல்வேறு... மேலும் பார்க்க

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்: பிரேமலதா விஜயகாந்த்

வரும் 2026 பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக செயலா் டி.வி. கணேஷ் இல்லத் திருமண வி... மேலும் பார்க்க