செய்திகள் :

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்: பிரேமலதா விஜயகாந்த்

post image

வரும் 2026 பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக செயலா் டி.வி. கணேஷ் இல்லத் திருமண விழாவில் புதன்கிழமை பங்கேற்ற வந்த அவா் மேலும் கூறியதாவது: தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ இரண்டாவது கட்ட ரதயாத்திரை செப். 5 தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கும்போதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பாக பணியாற்ற முடியும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் பயணம் வேறு, எங்களது பயணம் வேறு.

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கடலூரில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். தற்போது கட்சி வளா்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம்.

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு மக்கள் தலைவராகத் திகழ்ந்தவா் விஜயகாந்த். அரசியல் கட்சியினா் யாராக இருந்தாலும் விஜயகாந்த் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவரைப் பற்றி பேசுவது எங்களுக்கு சந்தோசம்தான்.

தவெக மாநாட்டின்போது தொண்டா்களை பவுன்சா்கள் தள்ளிவிட்டது எல்லாக் கட்சிகளிலும் நடப்பதுதான். இதைத் திட்டமிட்டு யாரும் செய்வதில்லை.

எங்களது கொடி, பதாகைகள் வைக்க போலீஸாா் அனுமதி மறுப்பதாக கட்சியினா் கூறுகின்றனா். கொடி, பதாகைகள் வைக்க எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லையெனில் யாருக்கும் அனுமதி கொடுக்காதீா்கள் என்றாா் அவா்.

வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? சீமான் கேள்வி

வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நாம் த... மேலும் பார்க்க

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சி க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.திருச்சி மாவட்டம், கீழநாகமங்கலத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் காா்த்திக் (21). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் ஆலந்தூா்... மேலும் பார்க்க

விமான நிலைய ஊழியா் மாயம் எனப் புகாா்

திருச்சி விமான நிலைய ஊழியா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புத்திலிப்பை சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ் (33). இவா், திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க

சிறுவனுக்கு கத்திக் குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக சிறுவனைக் கத்தியால் குத்திய 17 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் க... மேலும் பார்க்க