செய்திகள் :

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ்

post image

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கெடு விதித்துள்ளார். இல்லையென்றால், ஒரே மனப்பான்மை உடையவர்கள் ஒன்றிணைந்து செய்து காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:

”எம்ஜிஆர் இயக்கத்தை துவங்கிய காலத்தில் இருந்து அதிமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். இயக்கத்தில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் ஒரு நிலையில் நின்று, இயக்கத்துக்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செயல்படுகிறார்.

அவர் எடுக்கும் நடவடிக்கைகளை அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உள்ளது. கட்சி பிரிந்ததில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். 5 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அந்த நிலை மாற வேண்டுமென்றால் கட்சி ஒருங்கிணைய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Former Chief Minister O. Panneerselvam has said that the AIADMK can only win again if it unites.

இதையும் படிக்க : பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,செப்.05ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீட்டு பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்ப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போர்டில் ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனிய... மேலும் பார்க்க

ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில், அவரின் கருத்தை வரவேற்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,தனது உடலில் ஓடுவது அ... மேலும் பார்க்க

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் பெயரையே குறிப்பிடாமல் பேசினார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்திய... மேலும் பார்க்க