செய்திகள் :

நேபாளம்: Youtube, Facebook, Instagram, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம் - காரணம் என்ன?

post image

நேபாள அரசு Facebook, X, YouTube போன்ற பிரதான சமூக ஊடகங்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

social media - சோஷியல் மீடியா - வருமான வரி

நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கூறியதன்படி, இரண்டு டஜன் சமூக வலைத்தள நிறுவனங்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தில் பதிவு செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பின்பற்றாதபட்சத்தில், அவை முடக்கப்படுகின்றன.

அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள TikTok, Viber மற்றும் மூன்று சமூக ஊடக தளங்கள் நேபாளத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

நேபாள நாடாளுமன்றம் சமூக தளங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதாகவும், பொறுப்பான முறையில் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும் உறுதி செய்யும் வகையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

Nepal Parliament

அதன்படி, நிறுவனங்கள் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த நேபாளத்தில் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான கருத்துகள் தெரிவித்தால், பல லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

உள்ளடக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

மேலும் சில விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு அபாயமாக இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு தணிக்கை கருவியாகவும், ஆன்லைனில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் நபர்களைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி

இது கருத்து சுதந்திரத்திற்கு தடையாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் தரப்பின் நிலைப்பாடு: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சட்டங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களும், நிர்வாகிப்பவர்களும் அவர்கள் பகிரும், வெளியிடும், கூறும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு செ... மேலும் பார்க்க

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்கள் | Photo Album

செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெ... மேலும் பார்க்க

'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்... மேலும் பார்க்க

``திருவண்ணாமலை பெரிய கோபுரத்தைக் கட்டியது, என் தாத்தா நாயக்க மன்னர்’’ - அன்புமணிக்கு எ.வ.வேலு பதில்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், தி.மு.க-வின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் வெடித்திருக்கிறது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்திருப்பது, இருசமூகங்கள... மேலும் பார்க்க

``மோடி, அமித் ஷா, பாஜக தான் திருடர்கள்'' - சட்டமன்றத்தில் கொந்தளித்த மம்தா பானர்ஜி; என்ன நடந்தது?

வங்காளிகளுக்கு எதிராக பாஜக:பாஜக ஆளும் மாநிலங்களில், வங்காளி மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான கூறப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸின் "பாஷ... மேலும் பார்க்க

TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Explains

தமிழ்நாடு பாஜக குறித்து சமீபத்தில் நிர்மலா சீதாராமன் வழங்கிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில், த.நா. பாஜகவினருக்கு அமித் ஷா கொடுத்த 5 ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக... மேலும் பார்க்க