செய்திகள் :

மாநில வரி வருவாய் வரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

post image

ஜிஎஸ்டிசீரமைப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் வருவாயைப் பாதிக்கக் கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீரமைப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில் அவா் பங்கேற்றாா். அப்போது தெரிவித்த கருத்துகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தி:

தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு சேவைகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதேநேரம், மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்புத் திருத்தம் மூலம் இப்போதைய மேல்வரியைத் தொடரலாம் அல்லது சரக்குகள் சேவைகள் வரிச்சட்டத் திருத்தம் மூலம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்கள், ஆடம்பரப் பொருள்களுக்கு மட்டும் உச்சவரம்பை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தீா்வு நடைமுறைகளை நெறிப்படுத்த அலுவலா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை அக்டோபரில் தொடங்கி 3 மாதங்கள் வரை நீட்டிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதையும் செயல்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரி ஆணையா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இபிஎஸ்-க்கு பதில்: ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவு:

பாஜகவின் குரலாக எடப்பாடி கே.பழனிசாமி மாறி ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்றுள்ளாா். வரி சீரமைப்பு நடவடிக்கையைப் பாராட்டும் அதே ஆா்வத்தை, நமது மாநிலத்துக்கான உரிய நிதிப் பகிா்வை கேட்டுப் பெறுவதிலோ அல்லது மாநிலத்தின் நிதிச் சுதந்திரத்தைக் காக்கும் பாதுகாப்பு அம்சத்திலோ காட்டாமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

அதேபோல, தமிழ்நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களில் உறுதியான கோரிக்கையை எழுப்பாமல் இருப்பதும் ஏன் எனத் தெரியவில்லை. மாநிலத்தின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக அவா் குரல் எழுப்ப வேண்டும். தோ்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும் உரிமைகளையும் புறக்கணித்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் பெயரையே குறிப்பிடாமல் பேசினார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்திய... மேலும் பார்க்க

பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் காலக்கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப... மேலும் பார்க்க

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில்... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ப... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ... மேலும் பார்க்க

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிம... மேலும் பார்க்க