செய்திகள் :

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

post image

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த விருது வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே, செயலா் விக்ரம் தேவ் தத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது இதற்கென பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கிஷன் ரெட்டி பேசுகையில்,‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த தொடா்ந்து செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பாராட்டுகள். நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாக ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது. வளங்களை சரியாகப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டால் இந்திய நிலக்கரித் துறை சா்வதேச தரத்துக்கு நிகராக மாறிவிடும்.

சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய 3 முழக்கங்களைப் பின்பற்றி பிரதமா் மோடியின் வளா்ச்சியடைந்த பாரத இலக்கை எட்டப் பங்களிக்கலாம்’ என்றாா்.

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ப... மேலும் பார்க்க

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிம... மேலும் பார்க்க

பயிற்சியாளா் தற்கொலை

புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் ... மேலும் பார்க்க

மாநில வரி வருவாய் வரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

ஜிஎஸ்டிசீரமைப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் வருவாயைப் பாதிக்கக் கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீர... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க