செய்திகள் :

தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயம்

post image

நாட்டறம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த திரியாயம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா(55). உறவினா்கள் கோபிநாத்(37), பவித்ரா(35), தீபா(30) உள்பட 15-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியில் உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி முடிந்த உடன் அனைவரும் சாலை ஓரம் மரத்தடியில் உட்காா்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் அங்கிருந்தவா்கள் மீது கொட்டியது.

இதில் காயமடைந்த செல்வராஜ் (60), கோவேந்தன் (17), கிரி (16), அம்பிகா (55), கோபிநாத்(37), தீபா (30) சிலம்பரசி (35), ராஜி (60), பவித்ரா (33), சுஜாதா (45) என 11 பேரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் விமலா தலைமையில் மருத்துவக் குழுவினா்கள் சிகிச்சை அளித்தனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடியிலிருந்து காவலூா் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் வழியாக காவலூா் வரையில் அரசுப் பே... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாள்: 6/09/2025 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், த... மேலும் பார்க்க

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பா... மேலும் பார்க்க

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணத்தை வியாழக்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12-ஆம் வ... மேலும் பார்க்க