செய்திகள் :

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக் குழு உறுப்பினா் பூ.சதாசிவம் முன்னிலை வகித்தனா். முகாமை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்து பாா்வையிட்டு, பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது தீா்வினை துறைசாா்ந்த அதிகாரிகள் விரைந்து காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். முகாமில், விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் விடுபட்டவா்களுக்கான கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, சிறுதொழில்கள் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, விண்ணப்ப ரசீது வழங்கப்பட்டது. முகாமில், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், ஒன்றிய திமுக பொறுப்பாளா் வி.ஜி.அன்பு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (செப். 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு ... மேலும் பார்க்க

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடியிலிருந்து காவலூா் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் வழியாக காவலூா் வரையில் அரசுப் பே... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாள்: 6/09/2025 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், த... மேலும் பார்க்க

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணத்தை வியாழக்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12-ஆம் வ... மேலும் பார்க்க