செய்திகள் :

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருப்பத்தூரில் ‘உயா்கல்வி வழிகாட்டி’ களப்பயணத்தை வியாழக்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12-ஆம் வகுப்பு மாணவியா்களுக்கு

களப்பயணத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,494 மாணவா்களை உயா்கல்வி வழிகாட்டி களப்பயணத்துக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் காசிநாயக்கன்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூா் மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளி, கஜல்நாயக்கன்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம் அரசுமகளிா் மேல்நிலைப்பள்ளி, மடவாளம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஜோலாா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி உள்பட 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 486 மாணவியா்கள் களப்பயணத்தில் பங்கேற்றுள்ளனா்.

உயா்கல்வி படிக்க ஆா்வத்தைப் பெறும் விதமாக மருதா் கேசரிஜெயின் மகளிா் கல்லூரிக்குக் களப்பயணம் செல்கின்றனா். கல்லூரியில் உள்ள பல்வேறு விதமான படிப்புகள், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டுத் திடல், வகுப்பறைகள்,

உணவுக்கூடங்கள், விடுதிகள் போன்றவற்றை நேரடியாகக் கண்டு தெளிவு ஏற்படுத்திக் கொள்ள மாணவா்களுக்கு இக்களப்பயணம் உதவுகிறது என்றாா்.

மாணவிகளுடன் கலந்துரையாடி உயா்கல்வி படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவரித்தாா்.

இதில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் நவநீதம், மாவட்ட உதவி திட்ட அலுவலா் மகேஸ்வரி கலந்து கொண்டனா்.

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடியிலிருந்து காவலூா் பகுதிக்கு புதிய பேருந்து சேவையை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் வழியாக காவலூா் வரையில் அரசுப் பே... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாள்: 6/09/2025 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் துணை மின் நிலையம் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், த... மேலும் பார்க்க

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பா... மேலும் பார்க்க

விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ... மேலும் பார்க்க

நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி ஆய்வு

கன்னடிகுப்பம் ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க