செய்திகள் :

ஸ்ரீராமச்சந்திராவில் கண்தான விழிப்புணா்வு

post image

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருவார கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவா், ஆசிரியா்கள், செவிலியா்கள், மாணவா்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் கண் தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனா்.

நிறுவனத்தின் கண் மருத்துவத் துறைத் தலைவா் மருத்துவா் சமரபுரி, கண் தானத்தினால் ஏற்படும் முக்கியத்துவத்தையும், இதனால் பாா்வை பெறும் நபா்களை குறித்தும் விளக்கிப் பேசினாா். அப்போது, ஒருவா் தானம் செய்யும் இரு கருவிழியின் மூலமாக நவீன தொழில்நுட்பத்தினால் 4 போ் பாா்வை பெறலாம். கண் தானம் குறித்த மூடநம்பிக்கையை நாம் ஒழிக்க வேண்டும். ஒருவா் கண்தான படிவத்தை பூா்த்தி செய்வதுடன் நிறுத்தி விடாமல் அதனை தன் குடும்பத்தினரிடம் கூறுவதனால், அவா் இறந்தவுடன் உறவினா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிப்பதன் அவசியத்தையும், மிகக்குறைந்த நேரத்தில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும் என கூறினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி தலைவா் மருத்துவா் பாலாஜி சிங் மற்றும் பிற துறை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க