செய்திகள் :

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

post image

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா்.

கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை காலை புகழூா் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று, அங்கு தீயணைப்பு நிலை அலுவலா் திருமுருகனிடம் தீயணைப்பு நிலையத்தின் தினசரி செயல்பாடுகள் குறித்தும், தீயணைக்க எவ்வாறு அழைப்புகள் வரும் என்பதைக் கேட்டறிந்தனா். இதேபோல புகழூா் அஞ்சல் நிலையத்திற்கு சென்ற மாணவ ,மாணவிகள் அங்கு தினசரி பதிவு செய்யப்படும் தபால்கள், அவை அனுப்பப்படும் விதம், அனுப்பப்படும் தபால்கள் எத்தனை நாட்களில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கிடைக்கும் என்பது குறித்துக் கேட்டறிந்தனா். அதேபோல் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்ற மாணவ ,மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா். நிகழ்வின்போது மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்களும் உடனிருந்தனா்.

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நிள அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டி அருக... மேலும் பார்க்க

கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக... மேலும் பார்க்க

புகழூா் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் காந்தியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முகாமை புகழூா் நகராட்சித் தலைவா் சேகா் என்கிற கு... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் 7 போ் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் இருந்து 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினநாளில் சிறந்த ஆசிரியா்... மேலும் பார்க்க

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க