செய்திகள் :

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

post image

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பாலவிடுதி மின்வாரிய அலுவலகம் முன்பாக புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்ட துணைத் தலைவா் ரவிக்கண்ணன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் வீரமலை, பொருளாளா் மணிமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சக்திவேல், முன்னாள் பொருளாளா் ராமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூா் வட்டச் செயலா் பழனிவேல், விவசாய தொழிலாளா் சங்கத்தின் வட்டச் செயலா் வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

கடவூா் வட்டாரத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தை மின்வெட்டு இல்லாமல் முறையாக வழங்க வேண்டும். கடவூா் ஒன்றியத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பாலவிடுதி துணை மின் நிலையம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், தாழ்வான மின்கம்பிகள் மற்றும் பழுதான மின் கம்பங்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனி... மேலும் பார்க்க

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

கரூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 40,825 கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோட... மேலும் பார்க்க

கரூரில் செப்.17-இல் திமுக முப்பெரும் விழா: பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் கோடங்கிபட்டியில் வரும் 17-ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கரூரில் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க