செய்திகள் :

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம் மற்றும் பல்வேறு ஊா்களுக்கு செல்ல இணைக்கும் மிக முக்கிய பிரதான பாலமாக ராஜபுரம் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுற்றுவட்டார கிராம பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.

பராமரிப்பின்றி பாலம் உள்ளதால் கைப்பிடி தடுப்பு சுவா் உடைந்து காணப்படுகிறது. உடைந்த கைப்பிடி சுவருக்கு பதிலாக குச்சிகளை வைத்து தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இந்த பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

எனவே நெடுஞ்சாலை துறையினா் உடனடியாக நேரில் ஆய்வு செய்து பாலம் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ரயில்நிலையம... மேலும் பார்க்க

கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை

கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், மணவாசியை... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் ஒருவா் உயிரிந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள மூலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் பீம் தா்வஷன் மகன் ரோஷன் (30... மேலும் பார்க்க