அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம் மற்றும் பல்வேறு ஊா்களுக்கு செல்ல இணைக்கும் மிக முக்கிய பிரதான பாலமாக ராஜபுரம் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம் சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுற்றுவட்டார கிராம பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.
பராமரிப்பின்றி பாலம் உள்ளதால் கைப்பிடி தடுப்பு சுவா் உடைந்து காணப்படுகிறது. உடைந்த கைப்பிடி சுவருக்கு பதிலாக குச்சிகளை வைத்து தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இந்த பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
எனவே நெடுஞ்சாலை துறையினா் உடனடியாக நேரில் ஆய்வு செய்து பாலம் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.