செய்திகள் :

கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை

post image

கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், மணவாசியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(54). இவா் கரூரை அடுத்த வாங்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஆக. 26-ஆம்தேதி இரவு நெரூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றாா்.

பின்னா் நள்ளிரவில் கரூா்-வாங்கல் சாலையில் தலையில் பலத்த காயத்துடன், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிக் கிடந்தாா்.

இதனைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்கு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாரின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை வாங்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை யாரேனும் தாக்கியதில் பலத்த காயமடைந்தாரா அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ரயில்நிலையம... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் ஒருவா் உயிரிந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள மூலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் பீம் தா்வஷன் மகன் ரோஷன் (30... மேலும் பார்க்க