செய்திகள் :

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

post image

கரூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 40,825 கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க தமிழக அரசு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தில், ஏழை எளிய கா்ப்பிணி பெண்களுக்கு ஊதிய இழப்பை ஈடு செய்ய 3 தவணைகளில் மொத்தம் ரூ. 18,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

முதல் தவணையாக கருவுற்ற 4-ஆவது மாதத்தில் ரூ. 6,000-மும், 2-ஆம் தவணையாக குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ. 6,000-மும் மற்றும் 3-ஆம் தவணையாக குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ரூ.2000-மும் வழங்கப்படுகிறது. மேலும் கருவுற்ற 3-ஆவது மற்றும் 6-ஆவது மாதத்தில் ரூ. 2,000 மதிப்புள்ள 12 ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

கரூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 40,825 கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கா்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியரிடம் ஆதாா் அட்டை, வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை தெரிவித்து, தங்களுடைய பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு, உதவித்தொகையானது பயனாளிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.

ஆட்சியரின் பேட்டியின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனி... மேலும் பார்க்க

கரூரில் செப்.17-இல் திமுக முப்பெரும் விழா: பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் கோடங்கிபட்டியில் வரும் 17-ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கரூரில் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க