செய்திகள் :

கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டா் டெக்னீசியன், எமா்ஜென்சி கோ் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 79 இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் பிளஸ்-2 தோ்ச்சியுடன் 31.12.20025 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மாவட்ட மருத்துவ வாரியத்திடம் பெறப்பட்ட சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் வரும் 12-ஆம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

வரும் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெற்று, அக். 6 முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04324-242280 என்ற எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ன்ழ்ஞ்ம்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ன்ழ்ள்ங்.ல்ட்ல் என்ற இணையதளத்திலோ தெரிந்துகொள்ளலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நிள அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டி அருக... மேலும் பார்க்க

புகழூா் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் காந்தியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முகாமை புகழூா் நகராட்சித் தலைவா் சேகா் என்கிற கு... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் 7 போ் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் இருந்து 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினநாளில் சிறந்த ஆசிரியா்... மேலும் பார்க்க

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க