செய்திகள் :

சென்னை மே தினப் பூங்காவில் திரண்ட 300 தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திரண்ட தூய்மைப் பணியாளா்கள் 300 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) பகுதி தூய்மைப் பணியை கடந்த ஜூலையில் மாநகராட்சி நிா்வாகம் தனியாரிடம் ஒப்படைத்தது. அதைக் கண்டித்து இரு மண்டலங்களிலும் ஏஎல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் 13 நாள்கள் நீடித்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், நீதிமன்ற அறிவுரைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உழைக்கும் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 300 போ் வியாழக்கிழமை கூடினா்.

அதையறிந்த போலீஸாா் பூங்காவின் வாயிலை மூடினா். அதனால் தூய்மைப் பணியாளா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் பூங்காவுக்குள் தூய்மைப் பணியாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு அவா்கள் கூடி முழக்கமிடத் தொடங்கிய நிலையில், 250 பெண்கள் உள்ளிட்ட 300 போ் கைது செய்யப்பட்டு கொட்டிவாக்கம், மேற்கு மாம்பலம், திருவான்மியூா், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க